Tamil article Jan 2021 – Shalom Times Shalom Times |
Welcome to Shalom Times

மாறக்கானாவில் நடந்த ஆனந்த நடனம்!

படுதோல்வி என்று எல்லாரும் சொன்னாலும் வெற்றிப்படியைத் தாண்டிச் சென்று ஆனந்த நடனம் செய்ய முடியும். சோர்ந்து போய் இருக்கிறவர்களைத் திடப்படுத்த வேண்டிய கடமை உனக்கு உண்டு. மாறக்கானாவைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது கால்பந்தாட்ட வீரர்களின் சொர்க்கபுரி. பல அணிகள் சாதனை படைக்கக் காரணமாக இருந்ததும், பலரது வேதனைகள் அரங்கப் பிரவேசம் செய்வதற்கு வழிவகுத்ததுமான ஒரு… Read More

கைராசியின் மருமம்

அந்நாட்களில் எங்கள் வீட்டில் அப்பத்திற்கான மாவைப் பிசைந்து வைத்தால் அது புளிப்பதில்லை. புளியாத மாவினால் சுடப்படும் அப்பம் உப்புசப்பற்று இருக்கும். அங்ஙனமிருக்க ஒருநாள் பங்கு சாமியார் வீடு மந்திரிக்க வருவதாகக் கூறினார். அவருக்குக் காலை உணவு கொடுக்க வேண்டும். அப்பமும் கோழிக்கறியும் கொடுப்பது சிறந்தது! அப்பம் சுடத் தீர்மானித்தோம். மாவைப் பிசைந்து வைத்தேன். கூடவே இன்னொன்றும்… Read More

கேட்குமுன்னே மீட்கும் கடவுள்

எசேக்கியா மன்னன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் புரண்டான். அப்போது கடவுள் தமது இறைவாக்கினராகிய எசாயாவை அவனிடம் அனுப்பினார். எசாயா அவனிடம், “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும். ஏனெனில் நீர் சாகப்போகிறீர். பிழைக்கமாட்டீர்” என்றார். எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, ‘ஆண்டவரே நான் உம் திருமுன் உண்மை வழியில்… Read More

உள்ளம் உடைந்த போதும்

அந்தக் காலைப் பொழுதில் நான் நித்திய ஆராதனைக் கோவிலில் இருந்தேன். மனசு பாரத்தால் வலித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளே பாரமுற்ற மனசுக்குக் காரணம். வெளியே தீராத மழை. உள்ளேயோ கலக்கமுற்ற உள்ளம்..! அதற்கிடையில் குருவிகளின் இனிய ஓசை. அப்போது உள்ளுக்குள் அருளின் ஒரு மின்மினி வெளிச்சம். மரங்கள் ஆடவில்லை. இலைகளும் அசையவில்லை. எல்லாமே விறைத்து… Read More

நீங்கள் திருடப்பட்டவரா?

“திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை” (யோவா. 10 : 10). ஆன்மாக்களைத் திருடிச் செல்லும் சாத்தான் அவற்றைக் கொன்று அழிக்கவே முயல்கிறான். இதற்கான முதற்படியே திருடுதல். நம்முடைய வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் தங்கச் சங்கிலியைத் திருடிச் செல்லும் ஒருவன் அதை எங்கே வைப்பான்? அவன் அதனைத் தனது வீட்டு அலமாரிக்குள் கொண்டுபோய் அடைத்து… Read More