Shalom Times Tamil – Shalom Times Shalom Times |
Welcome to Shalom Times

குருவாகாமல் ஆயராகிய புனித அம்புறோஸ்

உலகளாவிய கத்தோலிக்கத் திருச்சபையின் திருவழிபாட்டு முறைகளில் அதிக கவனம் செலுத்தியவரும், ஒவ்வொரு பகுதியிலும் வழங்கி வரும் வழிபாட்டு முறைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, அவற்றையெல்லாம் திருச்சபையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கச் செய்ய வேண்டும் என வாதிட்டவரும் புனித அம்புறோஸ் ஆவார். “நான் உரோமையில் இருக்கும்போது சனிதோறும் உபவசிக்கிறேன். ஆனால் மிலானில் இருக்கும் போது அப்படிச் செய்வதில்லை என… Read More

துளையுண்ட இதயத்துடன் இறைவனிடம் சென்ற புனித பெத்ரோ கலும்ஸோடு

1654 ஜூலை 21-ம் நாள் இவர் பிறந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டின் வினயாஸ் என்ற பட்டணமே இவரது சொந்த ஊர். இயேசு சபைக் குருக்களின் பள்ளியில் பயின்ற இவர் தமது சிறு வயதிலேயே மறைக்கல்வியிலும் ஸ்பானிஷ் மொழியிலும் தேர்ச்சி பெற்றுப் பெரும் புலவராய்த் திகழ்ந்தார். இவை தவிர ஓவியம், அபிநயம், தச்சுப்பணி, பாட்டு போன்றவற்றிலும் இவர் சிறந்து… Read More

புல்லாவதா? நல்ல மரமாவதா?

வாணி ஓர் ஆரம்பப் பள்ளி மாணவி. அவள் தினமும் படுக்கச் செல்லுமுன் டைரி எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தாள். “ஆன் பிராங்கின் டைரிக் குறிப்புகள்” என்னும் ஒரு நூலைப் படித்ததால் ஏற்பட்ட ஒரு நல்ல பழக்கம் இது. அந்த நாள் இரவிலும் அவள் தன் டைரியைத் திறந்து பின்வருமாறு எழுதினாள். இன்று காலங்காத்தாலை தோழியர்களுடன் கொல்லையில் நடக்கச்… Read More

சிவப்புத் தொப்பி

பொதுநிலையினரே சபையின் வலிமை என உணர்ந்த கர்தினாள் யொவானி முந்தீனி, திருச்சபையின் செயல்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்க விரும்பினார். ஒரு முறை அவர் கனிமச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களைப் பார்க்கச் சென்றபோது அங்கே பிரபலமான ஒரு கம்யூனிஸ்ட் தோழரைக் கண்டார். அவருடைய தலையில் இருந்த தலைக்கவசத்தைக் கழற்றிய கர்தினாள் தமது சிவப்புத் தொப்பியை எடுத்து… Read More

பொன்னான வாய்ப்புகள்

அது விறுவிறுப்பான ஓட்டப் பந்தயத்தின் இறுதி நிமிடங்களாக இருந்தது. மைதானத்தில் திரண்டிருந்த அனைவரது கண்களும் கென்யா நாட்டு எய்பல் முத்தாயி என்ற வீரரிடம் தான் இருந்தன. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அவனது வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டிருந்தது. ஏனெனில் இனியும் அவர் கடக்க வேண்டிய தூரம் வெறும் பத்து மீட்டர் மட்டுமே. திடீரென்று அவர் தடம்… Read More

மாறக்கானாவில் நடந்த ஆனந்த நடனம்!

படுதோல்வி என்று எல்லாரும் சொன்னாலும் வெற்றிப்படியைத் தாண்டிச் சென்று ஆனந்த நடனம் செய்ய முடியும். சோர்ந்து போய் இருக்கிறவர்களைத் திடப்படுத்த வேண்டிய கடமை உனக்கு உண்டு. மாறக்கானாவைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது கால்பந்தாட்ட வீரர்களின் சொர்க்கபுரி. பல அணிகள் சாதனை படைக்கக் காரணமாக இருந்ததும், பலரது வேதனைகள் அரங்கப் பிரவேசம் செய்வதற்கு வழிவகுத்ததுமான ஒரு… Read More

கைராசியின் மருமம்

அந்நாட்களில் எங்கள் வீட்டில் அப்பத்திற்கான மாவைப் பிசைந்து வைத்தால் அது புளிப்பதில்லை. புளியாத மாவினால் சுடப்படும் அப்பம் உப்புசப்பற்று இருக்கும். அங்ஙனமிருக்க ஒருநாள் பங்கு சாமியார் வீடு மந்திரிக்க வருவதாகக் கூறினார். அவருக்குக் காலை உணவு கொடுக்க வேண்டும். அப்பமும் கோழிக்கறியும் கொடுப்பது சிறந்தது! அப்பம் சுடத் தீர்மானித்தோம். மாவைப் பிசைந்து வைத்தேன். கூடவே இன்னொன்றும்… Read More

கேட்குமுன்னே மீட்கும் கடவுள்

எசேக்கியா மன்னன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் புரண்டான். அப்போது கடவுள் தமது இறைவாக்கினராகிய எசாயாவை அவனிடம் அனுப்பினார். எசாயா அவனிடம், “ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும். ஏனெனில் நீர் சாகப்போகிறீர். பிழைக்கமாட்டீர்” என்றார். எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, ‘ஆண்டவரே நான் உம் திருமுன் உண்மை வழியில்… Read More

உள்ளம் உடைந்த போதும்

அந்தக் காலைப் பொழுதில் நான் நித்திய ஆராதனைக் கோவிலில் இருந்தேன். மனசு பாரத்தால் வலித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளே பாரமுற்ற மனசுக்குக் காரணம். வெளியே தீராத மழை. உள்ளேயோ கலக்கமுற்ற உள்ளம்..! அதற்கிடையில் குருவிகளின் இனிய ஓசை. அப்போது உள்ளுக்குள் அருளின் ஒரு மின்மினி வெளிச்சம். மரங்கள் ஆடவில்லை. இலைகளும் அசையவில்லை. எல்லாமே விறைத்து… Read More

நீங்கள் திருடப்பட்டவரா?

“திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை” (யோவா. 10 : 10). ஆன்மாக்களைத் திருடிச் செல்லும் சாத்தான் அவற்றைக் கொன்று அழிக்கவே முயல்கிறான். இதற்கான முதற்படியே திருடுதல். நம்முடைய வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் தங்கச் சங்கிலியைத் திருடிச் செல்லும் ஒருவன் அதை எங்கே வைப்பான்? அவன் அதனைத் தனது வீட்டு அலமாரிக்குள் கொண்டுபோய் அடைத்து… Read More